'நீட்' தேர்வில் சாதித்த ஸ்ரீஜனுக்கு கை கொடுத்த 'டைபிரேக்கர் பாலிசி' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 19, 2020

Comments:0

'நீட்' தேர்வில் சாதித்த ஸ்ரீஜனுக்கு கை கொடுத்த 'டைபிரேக்கர் பாலிசி'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'நீட்' தேர்வில், தமிழகத் தில் முதலிடம் பெற்ற ஸ்ரீஜனுக்கு, 'டைபிரேக்கர் பாலிசி' தான் கை கொடுத்து உள்ளது.
நீட் தேர்வில், ஒடிசா மாணவர் சோயப் அப்தாப், 720க்கு, 720 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் முதல் ரேங்க் பெற்றார். இவரை போலவே, 720 மதிப்பெண் பெற்ற, டில்லி மாணவி ஆகான்ஷா சிங்குக்கு, 2வது ரேங்க் கிடைத்தது.நீட் தேர்வில் ஒரே மதிப்பெணை, இருவர் எடுக்கும் பட்சத்தில், 'டைபிரேக்கர் பாலிசி' கடைப்பிடிக்கப்படும். அதாவது, உயிரியல் பாடப் பிரிவில், அதிக மதிப்பெண் எடுக்கும் நபருக்கு, ரேங்கில் முன்னுரிமை வழங்கப்படும். அதிலும் சமநிலை நீடித்தால், வேதியியல் மதிப்பெண் அடிப்படையில், முடிவு எடுக்கப்படும். அப்படியும் சமநிலை தொடர்ந்தால், எல்லா பாடங்களிலும் சேர்த்து, குறைந்த எண்ணிக்கையில், தவறான விடை எழுதிய நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இதிலும் சமநிலை நீடித்தால், வயதில் சீனியருக்கு வாய்ப்பு கிடைக்கும். சோயப் அப்தாப், வயது அடிப்படையிலேயே, தேசிய அளவில் முதல் ரேங்கை தட்டிச் சென்றார்.இதுபோலவே, 715 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தும்லா ஷினிசிட்டா, வினித் ஷர்மா, அம்பிரிஷா கயித்தான், சைதன்யா சிந்து ஆகியோருக்கும், டைபிரேக்கர் பாலிசியை பின்பற்றி, ரேங்க் நிர்ணயிக்கப் பட்டது. தமிழக மாணவர் ஸ்ரீஜன் உட்பட மூன்று பேர், 710 மதிப்பெண் பெற்றனர். இதில், ஸ்ரீஜன், 8வது இடம் பிடிக்க, டைபிரேக்கர் பாலிசி தான் கை கொடுத்தது. இதன் மூலம், 2018ல், 676 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில், 12வது இடம் பிடித்த மாணவி கீர்த்தனாவின் சாதனையை, இந்தாண்டு ஸ்ரீஜன் முறியடித்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews