மாற்றுத்திறன் அரசு ஊழியர்களுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 19, 2020

Comments:0

மாற்றுத்திறன் அரசு ஊழியர்களுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்வதால், மாற்றுத்திறன் அரசு ஊழியர்களுக்கு, பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சங்க பொதுச் செயலர் கோபிநாத், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:கொரோனா பேரிடர் காரணமாக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. செப்., 1 முதல், ௧௦௦ சதவீத பணியாளர்களுடன், அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதனால், மாற்றுத்திறன் அரசு பணியாளர்கள் அனைவரும், கண்டிப்பாக பணிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில், சென்னை உட்பட, பல்வேறு மாவட்டங்களில், மாற்றுத்திறன் அரசு பணியாளர்களும், தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசில் பணிபுரியும், மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட, மார்ச் முதல், பணிக்கு வருவதில் இருந்து, முழு விலக்கு அளித்து,மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல, தமிழக அரசுத் துறை, அரசு உதவி பெறும் நிறுவனங்கள், பொதுத்துறை, அத்தியாவசிய பணிகள் துறை போன்றவற்றில் பணிபுரியும், மாற்றுத்திறன் பணியாளர்கள், அரசின் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பணிக்கு வருவதில் இருந்து முழு விலக்கு அளித்திட, முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews