சட்டப்படிப்புக்கான நுழைவு தேர்வில் மதிப்பெண் குளறுபடி குறித்து தொடரப்பட்ட வழக்கிற்கு தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்படிப்பில் சேருவதற்காக தேசிய சட்டப்பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 5ம் தேதி வெளியானது. இத்தேர்வில் மதிப்பெண்களில் குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறி, ஓசூரை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், மனுவுக்கு நவம்பர் 5ம் தேதிக்குள் பதில் அளிக்க தேசிய சட்டப்பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்புக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.