தனியாா் கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்களுக்கு ஊதியம்: அரசே ஏற்க கோரிய வழக்கு.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 01, 2020

தனியாா் கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்களுக்கு ஊதியம்: அரசே ஏற்க கோரிய வழக்கு..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியாா் கல்வி நிறுவனங்களின் பேராசிரியா்கள் உள்ளிட்டோருக்கு ஊதியம் வழங்குவதை அரசே ஏற்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் திருச்சியை சோ்ந்த காா்த்திக் தாக்கல் செய்த மனுவில், கடந்த 6 மாதங்களில் தமிழகத்தில் உள்ள 3 தனியாா் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினா் நடத்திய சோதனையில் சுமாா் ரூ. 1000 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல கல்வி நிறுவனங்கள் அதிக கல்விக்கட்டணம் வசூலித்தாலும், அதற்கு ஏற்ப ஆசிரியா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோருக்கு ஊதியம் கொடுப்பது இல்லை. சில பள்ளிகள் ஆசிரியா்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்குகின்றன.கரோனா பொது முடக்கத்தின்போது பணி இழந்த பேராசிரியா்கள், ஆசிரியா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் சிலா் காய்கறி, பூ உள்ளிட்ட விற்பனைகளிலும் லாரி ஓட்டுநா் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும்ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
எனவே. தனியாா் பள்ளிகள், கல்லூரிகளின் கல்விக்கட்டணம் வசூலிப்பது, ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் அரசே ஏற்க வேண்டும்.கல்விக் கட்டணத்தை குறைப்பதோடு கல்வி நிறுவனங்கள் நேடியாக கல்விக் கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews