இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.14 லட்சம் பேர்,சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துஉள்ளனர்.
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்படுகிறது.இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஆன்லைனில் விண்ணப்ப பதிவு முடிந்துள்ளது.மொத்தம், 1.60 லட்சம் பேர் பதிவு செய்தனர். அவர்களில், 1.31 லட்சம் பேர், விண்ணப்ப கட்டணம் செலுத்திஉள்ளனர்.
அவர்களில், 1.14 லட்சம் பேர் மட்டும், தங்களின் அசல் சான்றிதழ்களின் ஒளி பிரதிகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதையடுத்து, விண்ணப்ப பரிசீலனை துவங்கியுள்ளது.இரட்டை விண்ணப்பங்கள், தவறான விண்ணப்பங்கள் நீக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும்.இதையடுத்து, இரண்டு நாட்களில், 'ரேண்டம்' எண் என்ற சம வாய்ப்பு எண் வெளியிட, தமிழக இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி முடிவு செய்துள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups