திருக்குறள் முற்றோதல் போட்டி: 10 ஆயிரம் பரிசுத்தொகை - பள்ளி கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - Click Here for Apply - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 12, 2020

Comments:0

திருக்குறள் முற்றோதல் போட்டி: 10 ஆயிரம் பரிசுத்தொகை - பள்ளி கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - Click Here for Apply

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரூர் கலெக்டர் அன்பழகன், வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சார்பில், திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ், 2018-19ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்க, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெறுகிறது. 70 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. கரூர் மாவட்ட, தமிழ் வளர்ச்சித் துறையினரால் போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்பவர்கள், 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்பு பெயர்கள், சிறப்புகள் ஆகியவற்றையும் அறிந்திருக்கவேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்கலாம். பரிசு பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது.
பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் விண்ணப்பத்தினை கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டட வளாகம், கரூர் என்ற முகவரிக்கு அஞ்சலிலோ அல்லது adtamildevelopmentkarur@gmail.com என்ற இ-மெயிலில் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews