அரசு பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு 17-க்கு தேதி முதல் மாணவர் சேர்க்கை.: அமைச்சர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 11, 2020

Comments:0

அரசு பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு 17-க்கு தேதி முதல் மாணவர் சேர்க்கை.: அமைச்சர் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு 17-க்கு தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 2 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் 17-ம் தேதி தொடங்கும். மேல்நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 24-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதேபோன்று 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் 22- ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தார். பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், 'தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கரோனா வைரஸின் தாக்கம் குறைந்த பிறகு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக்கேட்டு, அதன்பின்னர் அனைத்துத் துறைகளுடன் முதல்வர் கலந்தாலோசித்து முடிவெடுப்பார் என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews