வரும் கல்வி ஆண்டில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் என்னென்ன? சென்னை டி.பி.ஐ. அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 09, 2020

Comments:0

வரும் கல்வி ஆண்டில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் என்னென்ன? சென்னை டி.பி.ஐ. அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் ஆலோசனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வரும் கல்வி ஆண்டில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் என்னென்ன? என்று பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு அளிக்கவுள்ள பரிந்துரையை இறுதி செய்ய இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் கல்வித்துறை இயக்குநர்கள் பங்கேற்று உள்ளனர்.
வரும் கல்வியாண்டில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து முதல்வருக்கு அளிக்கப்படும் அறிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்கூட்டியே தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, பள்ளிகளுக்கான தேர்வுகள் முழுமையாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக அடுத்த கல்வியாண்டில் எந்தமாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், குறிப்பாக கொரோனா பரவல் இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள குறைபாடுகள் என்ன, அதனை எவ்வாறு பூர்த்தி செய்வது, வரும் கல்வியாண்டில் எப்படி இந்த கற்பித்தல் முறையை கொண்டு வரலாம் என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய கடந்த மே மாதம் 12ம் தேதி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 18 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. இந்த குழு ஏற்கனவே 2 முறைகளில் நேரடியாகவும், 2 முறை வீடியோ கால் மூலமும் கூடி ஆலோசனை நடத்தி, கடந்த மாதம் ஒரு முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்கள். இதனை தொடர்ந்து வரும் கல்வியாண்டில் எவ்வாறு கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தலாம், தொடர்ச்சியாக பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவு அதிகமாக இருக்கும் போது இந்த கொரோனா பரவல் உள்ள சூழலில் எப்படி அதை மேற்கொள்வது என்பது குறித்து முதல்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எனினும் தமிழக அரசு இது தொடர்பாக விரிவான அறிக்கை கேட்டதன் அடிப்படையில் விரைவில் அதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதற்கான ஒரு நடவடிக்கையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தற்போது இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர் மேலும் கல்வி தொலைக்காட்சிகளின் இயக்குநர் என 18 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் தரப்பில் இருந்து முழுமையான கருத்துக்கள் எடுத்துவைக்கப்படவுள்ளது. இந்த முழு கருத்துக்களையும் முழுமையாக ஆய்வு செய்து அதன் பின்னர் தமிழக அரசுக்கு இந்த குழு ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனையின் முடிவில் வரும் கல்வியாண்டில் எந்தெந்த மாற்றங்கள் செய்வதன் மூலமாக மாணவர்களுக்கு தடையில்லாமல் கல்வியை கொடுக்க முடியும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்ப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews