பெற்றோரால் செல்போன் வாங்கித்தர முடியாததால் சோகம்: ஆன்லைனில் படிக்க முடியாத ஏக்கத்தில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 01, 2020

Comments:0

பெற்றோரால் செல்போன் வாங்கித்தர முடியாததால் சோகம்: ஆன்லைனில் படிக்க முடியாத ஏக்கத்தில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெற்றோரால் செல்போன் வாங்கித்தர முடியாததால், ஆன்லைனில் பாடங்களை படிக்க முடியாத ஏக்கத்தில் 10ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் விக்‌னேஷ் (15). இவர் கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்காக விக்னேஷ் தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணம் இல்லை எனக்கூறி வாங்கித் தரவில்லை என தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 29ம்தேதி, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளுக்கு செல்போன் வாங்கி தரமுடியாததால் தாய் தற்கொலை: கோவை வடவள்ளி கருப்பராயன் கோயில் வீதியை சேர்ந்தவர் ரமணி (37). டிரைவர். இவரது மனைவி கலைவாணி (32). இவரது மகள் 10ம் வகுப்பு படித்து வந்தார். ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக ஸ்மார்ட் போன் வாங்கித் தரும்படி கலைவாணியிடம் மகள் கேட்டுள்ளார். அவர் தனது கணவரிடம் மகளுக்கு செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு, ஊரடங்கு காலத்தில் போதிய வருமானம் இல்லை. ஊரடங்கு முடிந்த பின்னர் செல்போன் வாங்கித் தருவதாக ரமணி கூறி உள்ளார். இதனால், மகளுக்கு செல்போன் வாங்கி தரமுடியாத ஏக்கத்தில், நேற்று முன்தினம் கலைவாணி வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் வகுப்புகளை படிக்க செல்போன் கிடைக்காத ஏக்கத்தில் மாணவனும், மகளுக்கு செல்போன் வாங்கி தர முடியாக வேதனையில் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 10ம் வகுப்பு மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆன்-லைனில் படிக்க செல்போன் வாங்கித் தராததால் விபரீத முடிவு என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுதொண்டமாதேவியைச் சேர்ந்த 15 வயது மாணவர் தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். செல்போன் வாங்க தன்னிடம் பணம் இல்லை என பெற்றோர் கூறியதால் மன விரக்தியில் இவ்வாறு மாணவர் முடிவு எடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஆன்லைன் வகுப்பில் படிக்க செல்போன் வாங்கி தராததால் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது 14 வயது மகன் விக்னேஷ் கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் அந்த பள்ளியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனவே ஆன்லைனில் படிப்பதற்கு வசதியாக செல்போன் ஒன்றினை வாங்கி தருமாறு விக்னேஷ் தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு விஜயகுமார் தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றும் முந்திரிக்கொட்டைகளை விற்று பணம் வந்த பின் செல்போன் வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் தனது தாயாரின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
தகவல் அறிந்து வந்த காடும்புலியூர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், தற்போது ஆன்லைன் கல்விக்கு செல்போன் வாங்க முடியாமல் மாணவன் உயிரிழந்திருப்பது கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews