கொரோனா தொற்று காரணமாக பணியில் ஈடுபட்டு அரசு ஊழியர் தனது பணிக்காலத்தில் இறப்பின் முன்மொழிவு அனுப்பிட வேண்டி கோருதல் மற்றும் படிவம் - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 31, 2020

Comments:0

கொரோனா தொற்று காரணமாக பணியில் ஈடுபட்டு அரசு ஊழியர் தனது பணிக்காலத்தில் இறப்பின் முன்மொழிவு அனுப்பிட வேண்டி கோருதல் மற்றும் படிவம் - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முனைவர் ந. வெங்கடாசலம், இ.ஆ.ப, இயக்குநர் (சமூக பாதுகாப்பு திட்டம்)
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம், சேப்பாக்கம், சென்னை -5.
தொலைபேசி எண் : 9445461702. தொலைபேசி எண் : 044-28525034.

மின்னஞ்சல் முகவரி: cra@gmail.com.
நே.மு.க.எண்.வரு.தணி 5(2) 18352 /2020 நாள் 28.07.2020
அன்பார்ந்த அய்யா, பொருள் :
முதலமைச்சர் பொது நிவாரண நிதி - சென்னை மாவட்டம் - பொது சுகாதராம் மற்றும் தடுப்பு மருந்து துறை - கோவிட்-19 - கொரோனா தொற்று நோய் பணியில் ஈடுபட்டு அரசு அலுவலர் தனது பணி காலத்தில் இறந்தது - முன்மொழிவு அனுப்பிட கோருதல் - தொடர்பாக.

பார்வை :
1. செ.கு.எண்,048, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை நாள் 22.04.2020. 2. பேரிடர் மேலாண்மைத் முகவையில் இருந்து மின் அஞ்சல் மூலம் பெறப்பட்ட நாள் 28.07.2020. பார்வையில் காணும் கடிதங்களின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. 2) கொரோனா தொற்று நோய் போராட்டத்தில் முன் நின்று பணிபுரியும் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறையைச் சார்ந்த பணியாளர்கள், காவல்துறை மற்றும் பிற அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், ஏதேனும் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு பதிலாக 50 லட்சம் வழங்கப்படும் எனவும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வை 1-ல் கண்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
3) இந்நேர்வு தொடர்பாக தங்களது துறையில் கொரோனா நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிர் இழந்த பணியாளர் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி பெற்று தருவதற்கு முன்மொழிவு அரசுக்கு அனுப்பிட ஏதுவாக கீழ்கண்ட ஆவணங்களுடன் தங்களது முன்மொழிவினை உடனடியாக அனுப்பி வைத்திட தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன். • கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டார் என்பதற்கான சான்று
.கொரோனா தொற்று நோய் காரணமாக நோய் பிடியில் இருந்ததற்கான மருத்துவ சான்று.
.கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் பணிபுரிய செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பின் அதன் நகல்.
• இறப்பு சான்று நகல்.
• வாரிசு சான்றிதழ் நகல்.
• குடும்ப அட்டை நகல்
4) மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி முன்மொழிவுகளுடன் அனுப்பி வைத்திடவும் கேட்டுக் கொள்கிறேன்.
இது மிகவும் அவசரமானதாகும். CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews