செமஸ்டர் தேர்வுகளை நடத்த தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு: தேர்வை ரத்து செய்ய கோரிக்கை!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 08, 2020

Comments:0

செமஸ்டர் தேர்வுகளை நடத்த தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு: தேர்வை ரத்து செய்ய கோரிக்கை!!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம் வகுப்பு மாணவர்களை போல் பாலிடெக்னிக், கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சருக்கு அவர்கள் அனுப்பியுள்ள மனுவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பானது தற்போது அதிகளவில் பரவி வருகிறது. மாணவர்களுக்கு இச்சமயத்தில் தேர்வு நடைபெற்றால் தொற்றானது அனைவருக்கும் பரவ வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே இந்த தேர்வினை ரத்து செய்ய வேண்டும். கல்லூரிகள் நடத்திய அலகுத்தேர்வு மதிப்பெண்களை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்திடவும், மதிப்பெண் பட்டியல் வழங்க வேண்டும் என்று தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளன. மாணவர்கள் மேற்படிப்பு மற்றும் பணிக்கு செல்ல கடைசி ஆண்டுகள் பருவ தேர்வுகள் மிக முக்கியமானவை என்பதால் தேர்வு குறித்த அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாக அச்சங்கத்தினர் கூறினர். பல மாநிலங்களில் கல்லூரி தேர்வு ரத்து செய்யப்பட்டதை போல தமிழகத்திலும் பருவ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் எனவும் கல்லூரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews