கிரகணத்தின் போது நீர் அருந்தலாமா? தூங்கலாமா மேலும் பல கேள்வி பதில்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 20, 2020

Comments:0

கிரகணத்தின் போது நீர் அருந்தலாமா? தூங்கலாமா மேலும் பல கேள்வி பதில்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சூரிய கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற பல கேள்விகளுக்கு பதிலை இங்கு பார்ப்போம்...
சூரிய கிரகணத்தின் போது சாப்பிடலாமா?
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் சூரிய கிரகணத்தின் போது சாப்பிடுவது கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என கூறுகின்றனர். கிரகணத்திற்கு முன் குறைந்த பட்சம் 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டு முடிப்பது நல்லது.சமைத்த உணவு கிரகணத்தின் போது மிச்சம் வைக்காமல் இருப்பது நல்லது. அப்படி மிச்சம் இருந்தால் தர்ப்பை புல் அல்லது துளசி இலை அதன் மீது போட்டு வைப்பது அவசியம். இல்லை என்றால் கிரகணத்திற்கு பின்னர் அந்த உணவை சாப்பிடக் கூடாது. நீர் அருந்தவும் கூடாது. கொதிக்க வைத்து ஆறிய நீரை அருந்தலாம். சூரிய கிரகணம் வகைகள்
சூரிய கிரகணம் என்பது வானில் நடக்கும் ஒரு அற்புத நிகழ்வு. சூரிய மண்டலத்தில் சூரியனை கோள்களுள் ஒன்றான பூமி சுற்றி வருகிறது. பூமியின் துணைக்கோளான சந்திரன் பூமியைச் சுற்றி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே.இப்படி சுற்றிவரும் போது பூமி சந்திரன் சூரியன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், நெருப்பு வளைய கிரகணம் என வகைப்படும்.

சூரிய கிரகணத்தின் போது தண்ணீர் குடிக்கலாமா?
சூரிய கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது. அதே போல் தண்ணீரும் குடிக்காமல் தவிர்ப்பது நல்லது. அப்படி குடிக்க வேண்டும் என்றால் சூடு செய்யப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது.

சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியில் வரலாமா?
சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது. சூரிய ஒளி படாமல் பார்த்துக் கொள்ளவும். சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் தங்கள் உடலில் அரிக்கிறது என சொரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. அப்படி செய்தால் குழந்தைக்கும் அந்த இடத்தில் கறுப்பு நிறத்தில் அல்லது தழும்பு போன்ற அடையாள ஏற்படக் கூடும் என நம் முன்னோர்கள் கூறுவதுண்டு. கிரகணத்தின் போது குளிக்கலாமா?
கிரகணத்தின் போது குளிக்கக் கூடாது. வீட்டை சுத்தம் செய்யக் கூடாது. கிரகணம் முடிந்த பின்னரே குளிக்க வேண்டும்.கிரகணத்திற்கு முன் குளித்திருந்தாலும், கிரகணம் முடிந்த பின்னர் குளிப்பது நல்லது. 30 நாட்களுக்குள் இரண்டு சந்திர கிரகணம், ஒரு சூரிய கிரகணம் - 100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அதிசயம்
கிரகணத்தின் போது தூங்கலாமா?
கிரகணத்தின் போது தூங்கக் கூடாது. கிரகணம் பொதுவாக கெட்ட விஷயம் என நம் இந்து புராணங்கள் கூறுகின்றன. ஆனால் கிரகணத்தின் போது செய்ய வேண்டிய நல்ல காரியம் என்றால் அது இறைவனை நாம் துதிப்பது மட்டுமே. கிரகணத்தின் போது சாப்பிட்டால் என்ன ஆகும்?
கிரகணத்தின்போது சாப்பிடலாமா கூடாதா?, அதனால் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுமா இல்லையா என்பது தொடர்பான விவாதம் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கிரகணத்தின் போது உணவை தவிர்க்க வேண்டும் என மருத்துவ அறிவியலும், இந்திய புராணங்களும் கூட கூறியுள்ளன. ஒரு தடுப்பு நடவடிக்கையாக, ஆபத்தான பாக்டீரியாக்களிலிருந்தும், கதிர்வீச்சுகளிலிருந்து உணவு பொருட்களை பாதுகாக்க துளசி இலைகள் அல்லது தர்ப்பைப் புல் கொஞ்சம் போட்டு வைக்க வேண்டும்.இந்த கிரகண காலத்தில் மனிதனின் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய கதிர்வீச்சுகள் வெளியாகின்றனர். இந்த கதிர்வீச்சுகள் உணவை மோசமாக பாதிக்கக் கூடியதாகவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்கின்றன, அந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய உணவை உட்கொள்ளும்போது உடல்நல கோளாறு ஏற்படலாம் மற்றும் வெவ்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கும். சூரிய கிரகணம் எப்போது?
ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழும் சூரிய கிரகணம் 3 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை நீடிக்கும். காலை 10:17 மணிக்கு தொடங்கி மதியம் 12.10 மணிக்கு சூரிய கிரகணம் உச்சமடைகிறது. மேலும் மதியம் 2.02 மணிக்கு கிரகணம் முடிவடையும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews