ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 19, 2020

Comments:0

ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் கே.கணேசன் கூறியதாவது:
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 58 வயது வரையும், அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள 60 வயது வரையும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இப்படி பணியாற்றி ஓய்வுபெற்ற பல லட்சம் பேர் அரசு ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்.
இவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் அரசு காப்பீட்டு திட்டத்திற்காக மாதம் ரூ.350 பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்படி ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும். ஆனால், இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், தொற்று நோயான கொரோனாவுக்கு சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில், தற்போது அரசு பணியில் இருப்பவர்களுக்கு, கொரோனா நோய்க்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற முடியும். இந்த பாகுபாட்டை மாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்டுள்ள அரசாணை எண் 56ன் மூலம் இனி தமிழக அரசு பணிகளில் தேவையற்ற பணி என்று சொல்லி, காலி பணியிடம் ஏற்பட்டால் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நிரப்பப்படாமல், வெளிமுகமை மூலம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலாளிகள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படும் நிலை உருவாகி உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அரசு பணிகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இந்த அரசாணையை ரத்து செய்து, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவு செய்து காத்திருக்கும் லட்சோபலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews