கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் , மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் மக்களின் துயரங்களை போக்க தமிழக அரசு அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
ஏற்கனவே அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டது. அதோடு விவசாயம், சிறு கடைகள், கட்டுமானம், தொழிற்சாலைகள் உள்பட பல்வேறு பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.
குடும்ப அட்டை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 கடன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.கடந்த 3 மாதங்களாக ரேஷனில் உணவு பொருட்களை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
பல்வேறு நலவாரியத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 வரையில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற அரசின் அறிவிப்புகளால் , ஏழை மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று கூறுகின்றனர் பொதுமக்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.