ஆன்லைன் வகுப்புகளால் ஆண்ட்ராய்டு செல்போன்கள் விற்பனை அதிகரிப்பு: தட்டுப்பாட்டால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அவதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 09, 2020

Comments:0

ஆன்லைன் வகுப்புகளால் ஆண்ட்ராய்டு செல்போன்கள் விற்பனை அதிகரிப்பு: தட்டுப்பாட்டால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அவதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஊரடங்கு அமலால் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஆண்ட்ராய்டு செல்போன்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. சிறு, குறு தொழிற்சாலைகள், டீக்கடை, ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1ம் தேதி முதல் பெரும்பாலான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழிலாளர்கள் தமது அன்றாட பணியை செய்து வருகின்றனர். கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து செல்போன் உற்பத்தி நிறுவனங்கள், விற்பனை கடைகள் மூடப்பட்டன. இதனால் பெரிய அளவில் வியாபாரம் பாதித்தது. தற்போது ஊரடங்கு தளர்வால் கடந்த சில நாட்களாக செல்போன் உற்பத்தி நிறுவனங்கள், விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் செல்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைகளுக்கு செல்போன் வரத்து அறவே இல்லை. இந்நிலையில் ஊரடங்கு அமலால் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் பாடம் எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக ஆண்ட்ராய்டு செல்போன், டேப்லெட் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்காக பெற்றோர் ஆண்ட்ராய்டு செல்போன்கள் அதிகளவில் வாங்கத்துவங்கியுள்ளனர். விற்பனை அதிகரித்துள்ளதால், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சேலத்தை சேர்ந்த செல்போன் விற்பனையாளர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய, சிறிய செல்போன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதைதவிர ஆன்லைன் மூலம் செல்போன்கள் விற்பனையாகி வருகின்றன. செல்போன், டேப்லெட் உள்ளிட்டவைகள் ெடல்லி நொய்டாவிலும், மும்பை, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து தான் இந்தியா முழுவதும் செல்போன் மற்றும் இதர எலக்டிரானிக்ஸ் பொருட்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.ஒரு ஆன்ட்ராய்டு செல்போன் ₹7500 முதல் ₹35 ஆயிரம் வரையும், டேப்லெட் ₹15 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் 24ம் தேதிக்கு மேல் இந்தியா முழுவதும் செல்போன்கள் எங்கும் சப்ளை இல்லை. அதேபோல் செல்போன்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது 5ம் கட்ட ஊரங்கில் இந்தியா முழுவதும் செல்போன்கள் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் செல்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் போதிய ஆட்கள் இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் கடைகள் திறந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் எங்கும் செல்போன் சப்ளை இல்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தாமதமாகியுள்ளது. இதையடுத்து ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக ஆன்ட்ராய்டு செல்போன் விற்பனை அதிகரித்துள்ளது. ஊரடங்கு அமலால் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட செல்போன்கள் மட்டுமே தற்போது விற்பனை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அந்த செல்போன்களும் வேகமாக விற்பனையாகி வருகின்றன. ஒரு சில கடைகளில் செல்போன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில பள்ளிகளில் செல்போன் கேட்டு மொத்தமாக ஆர்டர் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு செல்போன் சப்ளை செய்ய முடியவில்லை.செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி தொடங்கி புதிய செல்போன்கள்,டேப்லெட் உள்ளிட்டவைகள் விற்பனை வர இன்னும் ஒரு மாதத்திற்கு மேலாகும். அதுவரை செல்போன்களுக்கு தட்டுப்பாடு இருக்கும். இதனால் விலையும் கடந்த மார்ச் மாதத்தை காட்டிலும்,நடப்பு மாதத்தில் 10 முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு விற்பனையாளர்கள் கூறினர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews