CBSE தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 19, 2020

Comments:0

CBSE தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூலை 1ம் தேதி தொடக்கம்: மாணவர்களுக்கு ‘மாஸ்க்’ முக்கியம்
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1ம் தேதி முதல் 15 தேதி வரை நடக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து தான் வர வேணடும் என்று தெரிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தொடங்கின. கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் 29 பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் இந்த தேர்வுகளை மீண்டும் மே மாதம் நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டு இருந்தது. ஆனால், மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், தேர்வுகள் நடக்கும் தேதியை கடந்த 15ம் தேதி அறிவிப்போம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதன்படி, நேற்று சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டனர். அதில் ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதிவரை அந்த தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் தேர்வு எழுத வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தங்கள் சொந்த செலவில் சானிடைசர்களையும் எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பை பொறுத்தவரையில் 29 தேர்வுகளும், 10ம் வகுப்பை பொறுத்தவரையில் 12 தேர்வுகளும் நடக்க இருக்கின்றன. இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்வுகளில் வர்த்தக கல்வி, புவியியல், இந்தி, இந்தி விருப்ப பாடம், மனையியல், சமூகவியல், கணினி அறிவியல் (பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்கள்), தகவல் செயல் முறைகள், தகவல் தொழில் நுட்பம், உயிரி தொழில் நுட்பம், என முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளும் இடம் பெற்றுள்ளன.
மேற்கண்ட 12ம் வகுப்பு தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடியும். மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவல் குறித்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதேபோல தங்கள் பிள்ளைகள் எந்த நோய் பாதிப்பும் இல்லாதவர்கள் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்த கூடுதல் விவரம் வேண்டும் மாணவர்கள் சிபிஎஸ்இ இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews