பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் 202 ஆக அதிகரிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 27, 2020

Comments:0

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் 202 ஆக அதிகரிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் மையங்கள் 67ல் இருந்து 202 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், 10,746 தலைமை மதிப்பீட்டாளர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள். 32,235 ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். தனிமனித இடைவெளியுடன் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற வேண்டும் என்றால், ஒரு அறையில் 8 பேர் மட்டுமே அமர வேண்டும் என்பதால், மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சுமார் 1.20 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.
பன்னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியானது மே 27 முதல் தொடங்க உள்ளது. இதற்கிடையே அறை ஒன்றுக்கு 8 பேர் மட்டுமே விடைத்தாள் திருத்தும் பணியில் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மையங்களின் எண்ணிக்கையானது 67 இருந்து 202 ஆக அதிகரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10,000 தலைமை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களும், நாளை மறுநாள் முதல் 32,000 ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்காக 1.20 மாஸ்க்குகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews