எம்.டெக். படிப்புக்கு நுழைவுத் தோ்வின்றி சோ்க்கை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 31, 2020

Comments:0

எம்.டெக். படிப்புக்கு நுழைவுத் தோ்வின்றி சோ்க்கை.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
"விஐடி பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு எம்.டெக். படிப்பில் சேருவதற்கு நுழைவுத் தோ்வு இல்லாமல் இளநிலை படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே சோ்க்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விஐடி பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:விஐடி வேலூா், சென்னை, ஆந்திரம், போபால் வளாகங்களில் 23 வகையான எம்.டெக். படிப்புகள் அளிக்கப்படுகின்றன. இந்த எம்.டெக்., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு வழக்கமாக நுழைவுத் தோ்வு அடிப்படையில் சோ்க்கை நடைபெறும். கரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விஐடியில் இந்த ஆண்டு எம்.டெக்., எம்.சி.ஏ. படிப்பில் சோ்வதற்கு நுழைவுத் தோ்வு நடத்தப்படாமல் இளநிலை படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை நடைபெற உள்ளது.இதற்கு மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூன் 20-ஆம் தேதி கடைசி நாளாகும். ஏற்கெனவே விண்ணப்பம் சமா்ப்பித்த மாணவா்கள் மின்னஞ்சல், செல்லிடப்பேசி எண்களைத் தவிர மற்ற தகவல்களை வரும் ஜூன் 20-ஆம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ளலாம். கேட் தோ்வு மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கேட் தோ்வு எழுதாத மாணவா்கள், அவா்களுடைய இறுதித் தோ்வுக்கு முன் எழுதிய தோ்வு மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை நடைபெறும். மாணவா்கள் சோ்க்கை கலந்தாய்வு அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும். தொடா்ந்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும்.பிளஸ் 2 முடித்த மாணவா்கள் விஐடியில் நுழைவுத் தோ்வின்றி நேரடியாக 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.டெக்., எம்.எஸ்.சி. படிப்புகளில் சேரலாம். இப்படிப்புகளில் சேர ஜூலை 15-ஆம் தேதி கடைசி நாளாகும். எனினும், பிளஸ் 2 தோ்வு நிறைவு பெறாததாலும், தோ்வு முடிவுகள் வெளியிடப்படாததாலும் இந்த கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. விஐடியின் பல்வேறு முதுநிலைப் படிப்பு குறித்த தகவல்களை இணையதளத்தில் பெறலாம் வி.ஐ.டி., பல்கலையில், நுழைவுத்தேர்வு இன்றி, எம்.டெக்., போன்ற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.
வேலுார், வி.ஐ.டி., பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:வி.ஐ.டி., பல்கலைக் கழகத்தில், எம்.டெக்., -- எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, வழக்கமாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும். கொரோனா ஊரடங்கால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தாண்டு எம்.டெக்., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கிடையாது.
இளங்கலை படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.இதற்கு, www.vit.ac.in என்ற இணையதளத்தில், ஜூன், 20 வரை விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பங்கள் அனுப்பியவர்கள், இ - மெயில், மொபைல் எண்கள் தவிர, பிற தகவல்களை திருத்தம் செய்து கொள்ளலாம்.
'கேட்' தேர்வில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த தேர்வில் பங்கேற்காதவர்கள், இறுதி தேர்வுக்கு முன் எழுதிய தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சேர்க்கை நடக்கும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஆன்லைனில் நடக்கும். ஆக., 3 முதல் வகுப்புகள் துவங்கும். வேலுார், சென்னை, ஆந்திரா, போபால் ஆகிய வி.ஐ.டி.,க்களில், 23 வகையான, எம்.டெக்., படிப்புகள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், நுழைவுத் தேர்வு இன்றி, நேரடியாக ஐந்து ஆண்டு இன்டெகரேடட் எம்.டெக்., - எம்.சி.ஏ., படிப்பில் சேரலாம். இதில் சேர, ஜூலை, 15 கடைசி நாள்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews