நாடு முழுவதும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை படிப்படியாக தளர்வுகளை அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக unlock 1.0 என்ற பெயரில் மூன்று கட்ட தளர்வு நிலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜூன் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், விடுதிகள், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அங்கு தனிநபர் இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து ஜூலை மாதத்தில் அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட தளர்வில் சர்வதேச விமான போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான பார்கள், பொழுதுபோக்கு அரங்குகள் ஆகியவற்றை திறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக, அரசியல், விளையாட்டு, கலாசாரம் மற்றும் மத ரீதியிலான விழாக்களை நடத்தி கொள்வதற்கும் அனுமதி அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவிலும் இந்த முறை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே ஊரடங்கு பிறப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே இரவு 9 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே நடமாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே தனி நபர் பயணிப்பதற்கு இனிமேல் இ-பாஸ் பெற தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை சுகாதார காரணங்களுக்காக தனிநபர் பயணத்திற்கு தடை விதிக்க முடிவெடுத்தால், அதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் முன்கூட்டியே விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில் போக்குவரத்து, சிறப்பு ரயில் போக்குவரத்து, உள்நாட்டு பயணிகள் விமான போக்குவரத்து, வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் விமான போக்குவரத்து தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் சரக்கு போக்குவரத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு குறைந்த குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே அவர்களை வெளியே அழைத்து வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.