பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் - தேர்வுத்துறை உத்தரவு ! 10 ம் வகுப்பு தேர்வு ஹால் டிக்கெட்டை தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவர்களிடம் வழங்க வேண்டும் ; கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்க உத்தரவு !
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஹால் டிக்கெட் வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 15-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் மாணவர்கள், ஆன்லைன் மூலமாகவும் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு அனைத்து பள்ளிகளிலும் தேர்வு மையம் செயல்படும் என்பதால், பள்ளிகள்தோறும் துாய்மைப்பணிகள் நடந்து வருகின்றன.
வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.