கீமளூர் தொடக்கப் பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய தலைமை ஆசிரியர்.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 04, 2020

Comments:0

கீமளூர் தொடக்கப் பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய தலைமை ஆசிரியர்..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீமளூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 49 மாணவர்களின் குடும்பத்திற்குப் பள்ளி தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி மனோகரன் கரோனா ஊரடங்கு நிவாரணம் வழங்கினார்.கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய புலியூர் ஊராட்சி கீமளூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாநெல்லூர் பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி மனோகரன் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.
இந்த பள்ளியில் விவசாய கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள் 49 பேர் படிக்கின்றனர்.இந்நிலையில், கரோனா ஊரடங்கின் காரணமாக கீமளூரில் தான் பணிபுரியும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுவதை அறிந்து தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி மனோகரன் அந்த மாணவர்களின் குடும்பத்திற்கு உதவ முடிவெடுத்தார். இது குறித்து அவரது கணவர் ஜி.மனோகரனிடம் தானும் மாணவர்களுக்கு உதவுவதாகத் தெரிவித்தார்.தொடர்ந்து தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி மனோகர் கீமளூரில் அவரது பள்ளிக்குச் சென்று மாணவர்களைப் பெற்றோர்களோடு வரவழைத்தார்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கினார். நிகழ்வில் ஜி.மனோகரன், வழக்கறிஞர் பி.வெங்கடாசபதி, சமூக ஆர்வலர் அரவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து தலைமை ஆசிரியை சீதாலட்சுமி மனோகரனின் செயலை கீமளூர் பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews