தனது ஓவியத்தை வரைந்த பள்ளி மாணவிக்கு பிரதமர் மோடி நன்றி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 29, 2020

Comments:0

தனது ஓவியத்தை வரைந்த பள்ளி மாணவிக்கு பிரதமர் மோடி நன்றி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் பிரதமர் மோடியை கவுரவப்படுத்தும் வகையில் 12ம் வகுப்பு மாணவி அவரது ஓவியத்தை வரைந்திருந்தார். மாணவியின் வாழ்த்து, மகத்தான வலிமையின் ஆதாரம் என மோடி அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.தீபா எனும் ஆசிரியர் தனது மாணவி ஸ்வேதா என்பவர் வரைந்த மோடியின் பென்சில் ஓவியத்தை டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
அதில், "தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம் ஒரு பென்சில் ஸ்கெட்ச் மூலம் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க என்னைத் தூண்டியது," என தனது மாணவி கூறியதை பதிவிட்டு, மோடியை அடையும் வரை அவர் ஷேர் செய்யச் சொல்லி கேட்டுக்கொண்டதாகவும் பதிவிட்டிருந்தார். "அவரது இந்த அன்பான மற்றும் புதுமையான செயலுக்கு ஸ்வேதாவுக்கு நன்றி தெரிவியுங்கள். அவரது மதிப்புமிக்க வாழ்த்துக்கள் தான் மகத்தான வலிமையின் ஆதாரம்" என மோடி நன்றி தெரிவித்து பதிலுக்கு டுவீட் செய்து, மாணவியை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews