கல்லூரிகள் எப்போது திறக்கப்படும், தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? உயர்கல்வி துறை விளக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 16, 2020

Comments:0

கல்லூரிகள் எப்போது திறக்கப்படும், தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? உயர்கல்வி துறை விளக்கம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து உயர்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வு அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும் என்று தமிழக உயர்க்கல்வி துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 17ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் ஊரடங்கு 2-வது முறையாக நீட்டிக்கப்பட்ட பின்பும் இந்த விடுமுறையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக செமஸ்டர் தேர்வுகள், வழக்கமாய் மார்ச் இறுதி முதல் மே மாதம் வரை நடைபெறக்கூடிய செமஸ்டர் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கியவுடன் நடைபெறும் என்று தமிழக உயர்க்கல்வி துறை அதிகாரப் பூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏனென்றால் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த மார்ச் மாதம் முதல் விடுமுறையானது நீடித்து வருகிறது, மேலும் மே 3ம் தேதி வரை இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும், அதன் பிறகு கொரோனாவின் தாக்கம் குறித்து சில முடிவுகளை எடுக்கப்படும் என்று யுஜிசி தெரிவித்தது.
இந்த டிப்படையில் நடப்பு கல்வியாண்டில் மே மாதத்துடன் முடிவடைவதன் காரணமாக ஜூனில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய வுடன் நடப்பு கல்வி ஆண்டுக்காக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒவ்வொன்றாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு காரணமாக தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற குழப்பத்தில் இருந்த மாணவர்கள், அதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தேர்வுகள் குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு (2020-21)-க்கான அத்தனை செமஸ்டர் தேர்வுகளும் மற்றும் ARRIER தேர்வுகளும் சேர்த்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து உயர்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் என ஒவ்வொரு பல்கலைக்கழகளாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒட்டு மொத்தமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் செஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து உயர்கல்வி விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ‘தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் தாக்குதலை சமாளிக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்துக் கல்லூரிகளுக்கும் 17.3.2020 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாட்டிலிருந்தும் வந்து இங்கு கல்வி பயில்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் மீண்டும், கல்லூரிகள் துவங்கும் அடுத்த பருவம் / செஸ்டரின் துவக்கத்தில் தேர்வகள் நடத்தப்படும். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பதற்கான தேதி அரசால் பின்னர் அறிவிக்கப்படும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews