Breaking News: 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் - தொடக்கக் கல்வித்துறை புதிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 21, 2020

Comments:0

Breaking News: 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் - தொடக்கக் கல்வித்துறை புதிய அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
"5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்", மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட மாட்டார்கள் என தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பழனிசாமி அறிவிப்பு.
ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து திடீர் முடிவு வேறு பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்படும் என ஏற்கனவே துறை வெளியிட்ட அறிக்கையில், இருந்தது முந்தைய இயக்குநர் வெளியிட்ட அறிக்கையை திருத்தி புதிய அறிவிப்பை வெளியிட்டார் இயக்குநர் பழனிசாமி.
5, 8-ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் அதே பள்ளியில் பொது தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுத தேவையில்லை. 20-க்கும் குறைவான மாணவர்கள் படித்தால் அருகில் உள்ள பள்ளியில் தேர்வு எழுத வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மாணவர்கள் நலன் கருதி அதே பள்ளியில் தேர்வு எழுத பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
5 & 8 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் தேர்வு எழுதுவார்கள் என நேற்று செய்தி வெளியானது. இது குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது "அது வதந்தி என்றும் மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு எழுதுவார்கள்" என்றும் கூறினார்.
நீட்தேர்விற்கு எதிர்ப்பு எழுந்தபோது வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. எதிர்ப்பு குரல்கள் குறைந்து தேர்வு மையங்களை அருகிலேயே அமைக்க வேண்டும் என்று மாறியது. அதுபோல் இத்தேர்வு விசயத்திலும் தேர்வு வேண்டாம் என்ற குரல்கள் மாறி அந்தந்த பள்ளியிலே தேர்வு வேண்டும் என கேட்கலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews