மாணவர்கள் மோதல்: கல்வி அலுவலர் விசாரணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 23, 2020

Comments:0

மாணவர்கள் மோதல்: கல்வி அலுவலர் விசாரணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கடலுார் முதுநகரில் தனியார் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். கடலுார், முதுநகர் அடுத்த காரைக்காடு மற்றும் பச்சையாங்குப்பம் கிராமங்களைச் சேர்ந்த 16 வயது மாணவர்கள் இருவர், முதுநகரில் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்களுக்குள் கடந்த 21ம் தேதி ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பச்சையாங்குப்பம் மாணவர், காரைக்காட்டைச் சேர்ந்த மாணவரின் தலையில் பிளாடால் சரமாரியாக கிழித்துள்ளார்.
படுகாயமடைந்த அம்மாணவர் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து பச்சையாங்குப்பம் மாணவரை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து கடலுார் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்று சக மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். மாணவர்கள் இருவரும் வெவ்வேறு சினிமா நடிகர்களின் ரசிகர்கள் என்பதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews