கல்விக் கடன் வழங்கியதில் முறைகேடு: மத்திய அரசு அதிர்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 03, 2019

Comments:0

கல்விக் கடன் வழங்கியதில் முறைகேடு: மத்திய அரசு அதிர்ச்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கியதில் 70 சதவீத கடன் தொகை, உயர் சாதி மாணவர்களுக்கே வழங்கப்பட்டுள்ள விஷயம், மத்திய அரசின் புள்ளி விவரம் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிலர் கேள்வி எழுப்பியதால் கல்விக் கடன் பிரச்னை பரபரப்பாகியுள்ளது. பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கான செலவினங்களை எதிர்கொள்ள வசதியாக வங்கிகள் மூலம் கடன் உறுதியளிப்பு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இந்த கல்விக் கடன்களை வங்கிகள்தான் வழங்க வேண்டும் என்ற விதியும் உள்ளது. அப்படி வழங்கப்படும் கல்விக் கடன்கள், கடன் உறுதி நிதித் திட்டம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்விக்கடன்கள் அனைத்தும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டாலும் தேசிய கடன் உறுதி அறக்கட்டளையின் உத்தரவாதத்தின் பேரில் 7 லட்சத்து 50 ஆயிரம் வரையில் பெற முடியும். இதற்கு பிணையாக ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
கடந்த 2016-17ம் ஆண்டு வரை வழங்கிய கடன்களை பொறுத்தவரையில், மேற்கண்ட திட்டத்தின் கீழ் 4 லட்சத்து ஆயிரம் மாணவர்கள் கடன் பெற்று பயனடைந்துள்ளனர். அதில் 67 சதவீதம் பேர் பொதுப் பிரிவினர். 23 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்டோர், 7 சதவீதம் பேர் எஸ்சி, 3 சதவீதம் பேர் எஸ்டி பிரிவினர். இதுபோல வழங்கப்பட்டுள்ள கல்விக் கடன்களில் பிரிவு அடிப்படையில் பார்த்தால் கடன் வழங்கும் அளவில் வேறுபாடுகள் அல்லது வித்தியாசம் உள்ளது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சக புள்ளி விவரங்களில் இருந்தே அறிந்துகொள்ள முடிகிறது. கடந்த 2016-17ம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த கல்விக் கடனின் அளவை பார்த்தால், மற்ற சமூகத்தினரை விட பொதுப் பிரிவினருக்கே அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. கடன் உறுதி நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்விக் கடன் தொகையான 13 ஆயிரத்து 797 கோடியில் பொதுப்பிரிவினர் 70 சதவீதம் வரை பெறலாம். அந்த வகையில், பொதுப்பிரிவினர் 67 சதவீதம் வரை கடன் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவினருக்கு சராசரியாக 3.54 ஆயிரம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சதவீதத்துக்கு மாறாக, இதர பிரிவினருக்கு கடன் அளவு என்பது ஓபிசிக்கு 2.91 லட்சம், எஸ்சி பிரிவினருக்கு 3.24 லட்சம், எஸ்டி பிரிவினருக்கு 3.17 லட்சம் என வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விவரப்படி வழங்கப்பட்டுள்ள கடன்கள் தொடர்பான புள்ளி விவரங்களை பார்த்தால், இதர பிரிவினர் கல்விக் கடன் பெறுவதில் உள்ள சிரமங்களையும், கல்விக் கடன் பெற முடியாத நிலையையும், குறைந்த அளவே கடன் பெற முடியும் என்பதையும் காட்டுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டத்தில் பிணையமின்றி வழங்கப்பட்ட கடன்கள் குறைவாகத்தான் இருக்கிறது. அந்த வகையில், சமூக பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள்தான் குறைந்த அளவில் கடன் பெற்றுள்ளனர். ஒரு பிரிவுக்கும் இதர பிரிவுக்கும் கடன் வழங்குவதில் இதுபோல வேறுபாடு அல்லது இடைவெளி இருந்தால் அது சமூகநீதிக்கு எதிரானது என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2017-18ம் ஆண்டுக்கான தேசிய கடன் உறுதி அறக்கட்டளை நிறுவனத்தின் தகவல் அறிக்கையில் இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதற்கு 29 வங்கிகள்தான் தங்களை பதிவு செய்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் முக்கிய தனியார் வங்கிகள் பலவற்றின் பெயர்கள் விடுபட்டுள்ளன. அதே நேரத்தில் பொதுத்துறை வங்கிகள் பெயர்கள் அனைத்தும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மேலும், அந்த அறிக்கையில் 83 சதவீத கடன்கள் 4 லட்சம் அளவில் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமூகத்தில் உயர் மட்டத்தை சேர்ந்த குடும்பங்களில் விழிப்புணர்வு பெற்ற மாணவர்களும், உயர்சாதியை சேர்ந்தவர்களும் வங்கிகளுடன் உள்ள தொடர்பின் மூலம் அதிக அளவில் கடன்களை பெற்றுவிடுகின்றனர் என்று கல்விக் கடன் பெறுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நபர்கள் தெரிவிக்கின்றனர். இதை உறுதி செய்யும் வகையில், கல்விக் கடன் வழங்கும் அலுவலர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறும்போது, ‘‘வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதுபோன்ற கடன் வழங்குவதை, கண்டறிந்து அதை பெறுவது கடினம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என்றார்.
பிரிவு வாரியாக வேறுபாடு கடன் உறுதியளிப்பு நிதித் திட்டத்தின் (CGFSEL) கீழ் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தில் வழங்கப்பட்ட கடன்கள் குறித்த அட்டவணையில் ஒரு பிரிவினருக்கும் மற்ற பிரிவினருக்கும் உள்ள வேறுபாடுகள் வெளியிடப்பட்டுள்ளது. உயர் மட்டத்தை சேர்ந்த குடும்பங்களில் விழிப்புணர்வு பெற்ற மாணவர்களும், உயர்சாதியை சேர்ந்தவர்களும் வங்கிகளுடன் உள்ள தொடர்பின் மூலம் அதிக அளவில் கடன்களை பெற்றுவிடுகின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews