டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்தது: பள்ளிகள் திறப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 06, 2019

Comments:0

டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்தது: பள்ளிகள் திறப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்துள்ளதால் இன்று பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. டெல்லியில் காற்று மாசைக் குறைக்க ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதன்முதலில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக இது நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் டெல்லியில் காற்று மாசு கணிசமாகக் குறைந்திருப்பதாக டெல்லி அரசு கூறியிருந்தது. டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்தபின் மீதமிருக்கும் வைகோலை எரிப்பதால், கடுமையான புகைமூட்டம் டெல்லியை சூழ்ந்துள்ளது. இது தவிர வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும் 5-ம் தேதி வரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப் பணிகளில் ஈடுபடத் தடை விதித்துள்ளது. டெல்லியில் காற்று மாசைக் குறைக்க ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் இன்று மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளிகளுக்கு நேற்று வரை விடுமுறைவிடப்பட்டது. இந்தநிலையில் மஹா புயல் காரணமாக ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் காற்று வீசி வருகிறது. வடக்கு சமவெளிகளில் புதன், வியாழக்கிழமைகளில் மழை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்துள்ளது. காற்றுமாசு அவரசநிலையில் இருந்து மோசமான நிலை என்ற அளவுக்கு மாறியுள்ளது. காற்று மாசு சற்று குறைந்துள்ளதால் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை நீட்டிக்கப்படவில்லை. தீபாவளி விடுமுறைக்கு பிறகு டெல்லியில் இன்று பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் வருகை சராசரி என்ற அளவில் இருந்தது. மாணவ, மாணவியர் சுவாச கவசம் அணிந்தபடி பள்ளிகளுக்கு வந்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews