அரசாணை வெளியிட்டும் ஓய்வூதியம் இல்லை: சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் குமுறல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 16, 2019

அரசாணை வெளியிட்டும் ஓய்வூதியம் இல்லை: சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் குமுறல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசாணை வெளியிட்டும் ஓய்வூதியம் வழங்காததால், ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர்கள், மகளிர் நல அலுவலர், மேற்பார்வையாளர் சங்க மாநில தலைவர் சங்கர்பாபு கூறியது: சத்துணவு திட்டம், அங்கன்வாடி மையத்தில் பணியாற்றியவர்களில், தகுதியானவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக அரசு பணி நியமனம் செய்தது. அங்கன்வாடி பணியாளர்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மகளிர் ஊர் நல அலுவலர், சமுதாய ஊட்டச்சத்து மேற்பார்வையாளராக பணி நியமனம் வழங்கப்பட்டது. இவர்கள் 25 ஆண்டுகள் சத்துணவு திட்டத்தில் பணியாற்றி 2003 க்கு பிறகு அரசு பணி வழங்கப்பட்டவர்கள். இவர்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு, அரசின் நிரந்தர பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்கள் என்பதால் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற அரசு 2019 ஆக.28 ல் மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க ஆணை வெளியிட்டது. 3 மாதம் கடந்தும் ஓய்வூதியம் வழங்கவில்லை. ஓய்வு பெற்ற 2 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரமின்றி அவதிப்படுகின்றனர். காலதாமதமின்றி அரசாணையை நடைமுறைப்படுத்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews