விவசாயிகளுக்கு இனி 'நல்லகாலம்': இந்தியாவில் முதன்முறையாக சட்டம் இயற்றியது தமிழக அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 29, 2019

Comments:0

விவசாயிகளுக்கு இனி 'நல்லகாலம்': இந்தியாவில் முதன்முறையாக சட்டம் இயற்றியது தமிழக அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விவசாயிகள் வருமானத்தைப் பெருக்க இந்தியாவில் முதன்முறையாக தமிழக அரசு புதிய சட்டம் இயற்றியது. தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் என்ற பெயரில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. விவசாய உற்பத்தியை பெருக்கவும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கவும் இயற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின்படி, கொள்முதலாளர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் விலை ஒப்பந்தம் செய்ய முடியும்.ஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே உற்பத்தி பொருட்களை பரிமாற்றம் செய்ய இச்சட்டம் வழிவகுக்கும். அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை இச்சட்டம் தடுக்கும். வேளாண் பொருள் கொள்முதலாளர், வணிக வரித்துறையால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசு சார்பில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியா முழுவதும், போதிய வருமானம் மற்றும் விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை இருந்து வருகிறது. விவசாயத்தை நம்பி வாங்கிய கடனும் வருமானம் இல்லாததால், கட்டத் தவறி குடும்பமே சிக்கலில் தவிக்கிறது. இதனால் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பல மாநில அரசுகளும் முயன்று வந்தன. தமிழக அரசு ஒருபடி மேலே சென்று, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் என்ற பெயரில் புதிய சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டத்தின் அம்சங்கள்:
* கொள்முதலாளர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் விலை ஒப்பந்தம் செய்ய முடியும்.
* ஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே உற்பத்தி பொருட்களை பரிமாற்றம் செய்ய சட்டப் பாதுகாப்பு.
* அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை தடுப்பதற்கான சட்டம்.
* வேளாண் பொருள் கொள்முதலாளர், வணிக வரித்துறையால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews