TRB கணினி ஆசிரியர் தேர்வு - மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு நீதிமன்றத்தில் அட்வான்ஸ் பெட்டிஷன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 22, 2019

Comments:0

TRB கணினி ஆசிரியர் தேர்வு - மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு நீதிமன்றத்தில் அட்வான்ஸ் பெட்டிஷன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கணினி ஆசிரியர்கள் தேர்வு குறித்து ஆசிரியர்கள்தான் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசும் நீதிமன்றத்தில் அட்வான்ஸ் பெட்டிஷன் போட்டுள்ளது. இந்தியாவே கணினி மையமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் பாடத் திட்டமும், தனியார் பள்ளிகளின் பாடத் திட்டமும் வேறாக உள்ளது. எனவே, அரசுப் பள்ளிகளின் கேள்வித்தாள் தனியார் பள்ளிக்கு வழங்கப்படும் என்ற செய்தி தவறானது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய பாட நிர்ணயம் என்ற கல்வி முறை இந்தியாவிலேயே முன்மாதிரி கல்வித் திட்டமாக இருக்கும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது பாடத் திட்ட முறை மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களின் கற்றல்திறன் ஓராண்டுக்குப் பின் பிரகாசமாக இருப்பது தெரிய வரும். அதோடுமட்டுமன்றி அந்த மாணவர்களின் எதிர் காலத்தை உயர்த்தும் வகையில் பாடத் திட்டம் அமையும் என்றார் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews