மருத்துவத்திற்கு மறுகவுன்சலிங் கோரிய மனுக்கள் தள்ளுபடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 25, 2019

Comments:0

மருத்துவத்திற்கு மறுகவுன்சலிங் கோரிய மனுக்கள் தள்ளுபடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மறு கவுன்சலிங் நடத்தக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, தேவைப்பட்டால் வெளிமாநிலத்தவர் சான்றுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. மதுரை, நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சோம்நாத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழக மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் ேசர்க்கை கவுன்சலிங்கில் 126 இடங்களுக்கு வெளிமாநில மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த இடங்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும். ஆனால், இதுகுறித்து மாணவர் சேர்க்கைக்கான குறிப்பேட்டில் எதுவும் குறிப்பிடவில்லை. இதனால், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் சீட் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கவுன்சலிங்கை ரத்து செய்து, தமிழக மாணவர்கள் பங்கேற்கும் வகையில் புதிதாக பட்டியல் வெளியிட்டு கவுன்சலிங் நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இதேபோல் மேலும் சிலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், வெளிமாநிலத்தைச் சேர்ந்த 126 மாணவர்களையும் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டிருந்தது. மேலும், இரு தரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி எம்.சுந்தர் நேற்று பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலோ, இஎஸ்ஐ, அண்ணாமலை பல்கலை மற்றும் இதர மருத்துவக்கல்லூரிகளிலோ மாணவர் சேர்க்கைக்கு சட்டப்பூர்வ உரிமை கோர முடியாது. தரவரிசைப்பட்டியல் தவறானது என்பதற்கு போதுமான ஆதாரங்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. மாநில ஒதுக்கீட்டிற்குரிய 85 சதவீத இடத்தில் வெளிமாநிலத்தினர் சேர்ந்தனர் என்பதை, மனுதாரர் தரப்பில் யூகங்களின் அடிப்படையிலேயே கூறியுள்ளனர்.
இதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. 126 பேரில் 78 பேர் மீது எந்த தவறும் இல்லையென மனுதாரர்கள் தரப்பிலேயே ஒத்துக் கொண்டுள்ளனர். எனவே, மறு கவுன்சலிங் நடத்த வேண்டுமென இந்த நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என்பதால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தேவைப்பட்டால், அரசுத் தரப்பில் சம்பந்தப்பட்ட வெளிமாநில மாணவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். இதில், ஏதேனும் தவறு நடந்திருப்பது தெரியவந்தால், அவர்களை வெளியேற்றுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வெளி மாநிலத்தவர் கலந்து கொண்டதால் 2019 - 20க்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வை ரத்து செய்து, புதிய கலந்தாய்வு நடத்தக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது இந்த நிலையில் வெளி மாநிலத்தவர் கலந்து கொண்டதால் 2019 - 20 ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வை ரத்து செய்து, புதிய கலந்தாய்வு நடத்தக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தில் இருப்பிட சான்றிதழ் பெறுவதில் ஏதேனும் விதிமீறல் செய்திருந்தால் மருத்துவ கல்வி இயக்கமே விசாரணை செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews