10 ஆயிரம் விதைப்பந்து தயாரிப்பில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 27, 2019

Comments:0

10 ஆயிரம் விதைப்பந்து தயாரிப்பில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சேதுபாவாசத்திரம் அருகே குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 10 ஆயிரம் விதைப்பந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட தொடக்க விழா கடந்த 24ம் தேதி நடந்தது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதையடுத்து இழந்த பசுமையை மீட்டெடுக்கும் விதமாக விதைப்பந்துகளை தயாரித்து இப்பகுதியில் நடவு செய்ய வேண்டுமென மாணவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் ஆலோசனை வழங்கினார். இதையடுத்து தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கோபிகிருஷ்ணா மேற்பார்வையில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர் தலைவர் காவியச்செல்வன் தலைமையில் மாணவர்கள் விதைப்பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 30ம் தேதி விதைப்பந்துகளை நடவு செய்ய மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews