அதிகாரிகளின் குளறுபடியால் அரசு பணி பறிப்பு: பெண்ணுக்கு 10 லட்சம் இழப்பீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 04, 2019

அதிகாரிகளின் குளறுபடியால் அரசு பணி பறிப்பு: பெண்ணுக்கு 10 லட்சம் இழப்பீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அதிகாரிகளின் குளறுபடியால் பணி வழங்கப்படாத அரசு பணி வழங்கப்படாத பெண்ணுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் 8 வாரத்துக்குள் 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்த பி.ஆண்டாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கடந்த 2007ம் ஆண்டு பிரிக்கப்படாத பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் பணிக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த என்னிடம் நேர்காணல் நடத்தப்பட்டு எனக்கு உயர் நிலைப்பள்ளி ஒன்றில் பணிநியமனமும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த பணியிடம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டது எனக்கூறி பிடிஓ என்னை பணியில் நியமிக்க மறுத்துவிட்டார். அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதிகாரிகளின் குளறுபடி குறித்து விசாரிக்கவும், எனது மனுவை பரிசீலித்து தீர்வு காணவும் மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 2007ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் உயர் நீதிமன்ற உத்தரவை பரிசீலிக்காமல், எனக்கு வழங்கப்பட்ட பணி நியமன உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. எனவே எனக்கு பணி வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘‘மனுதாரர் 2007ம் ஆண்டு தனது 34 வயதில் இந்த பணிக்கு விண்ணப்பித்து, பணி ஆணையும் பெற்றுள்ளார்.ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவரை பணியமர்த்தவில்லை. இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. இதனால் மனுதாரர் தற்போது அரசுப்பணியில் சேருவதற்கான வயதை கடந்துவிட்டதால் அவரால் பணியில் சேர முடியாமல் போய்விட்டது. எனவே மனுதாரருக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் மனஉளைச்சலுக்கு தற்போது பிரிக்கப்பட்ட மாவட்டமாக உள்ள அரியலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், இழப்பீடாக 10 லட்சத்தை 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews