👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கிறிஸ்தவ மிஷினரிகள், கல்வி நிறுவனங்கள் குறித்து அளித்த தீர்ப்பில் கூறியிருந்த கருத்தை நீக்கம் செய்வதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் விலங்கியல் துறையில் பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றபோது உதவி பேராசிரியர்கள் சாமுவேல் டென்னிசன் மற்றும் ரவின் ஆகியோர் பாலியல் தொல்லை அளித்ததாக கல்லூரி நிர்வாகத்திடம் 34 மாணவிகள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், பணிநீக்கம் செய்வது தொடர்பாக சாமுவேல் டென்னிசன், ரவின் ஆகியோருக்கு கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாமுவேல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார். அவர் அளித்த தீர்ப்பின் 32வது பத்தியில், “கிறிஸ்துவ மிஷினரிகள் மத மாற்றத்தில் ஈடுபடுவது குறித்தும், இருபாலர் கல்வி வழங்கும் கிறித்துவ கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பெற்றோர் கருதுவதாகவும் கருத்தை பதிவு செய்திருந்தார்”. தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நீதிபதியின் இந்த கருத்து குறித்து பல்வேறு தரப்பிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. வழக்கின் எல்லையை மீறி இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்றும் பல குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கில் தொடர்பில்லாத சர்ச்சைக்குரிய கருத்துக்களால் நீதிமன்றத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன என்றும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிராகவும், வழக்கிற்கு தொடர்பில்லாமலும் கருத்துகள் உள்ளன என்றும் மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரி சார்பில் வக்கீல் ஜான் சக்காரியா நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் நேற்று முறையீடு செய்தார். இதை ஏற்ற நீதிபதி, தனது தீர்ப்பில் கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் குறித்து பதிவு செய்த 32வது பத்தியை வாபஸ் பெறுவதாக கூறி அந்த பகுதியை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U