👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பாரதியார் பல்கலையின், 'சிண்டிகேட்' கூட்டம், உயர்கல்வித் துறை செயலர், மங்கத்ராம் சர்மா தலைமையில் இன்று நடக்கவுள்ளது.
லஞ்ச வழக்கில் கைதாகி, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியரை மீண்டும் பணியில் அமர்த்துவது, அமைச்சர் ஒருவரின் புதிய கல்லுாரிக்கு, விதிகளை மீறி, 10 பாடப்பிரிவுகளை துவக்க அனுமதிப்பது குறித்த விஷயங்கள், நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.பணி நீக்கம்கோவை, பாரதியார் பல்கலை துணைவேந்தராக இருந்த கணபதி, வேதியியல் துறை தற்காலிக பேராசிரியர், தர்மராஜ் ஆகியோர், 2018ல், உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கில், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.கணபதி, பதவி நீக்கமும், தர்மராஜ், தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.
தர்மராஜ் மீதான லஞ்ச வழக்கில், நீதிமன்றத்தில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், தன்னை மீண்டும் பணியில் சேர்க்க கோரி, பல்கலை நிர்வாகத்திடம் மனு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு, பல்கலை வட்டாரத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பிஇருக்கிறது.
பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'தற்காலிக பணிநீக்கத்துக்கு, காலவரையறை இருப்பது உண்மை. ஆனால், அடிப்படை விதிமுறைகள், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொருந்தாது. 'பேராசிரியர் தர்மராஜ் மீதான விசாரணை முடிவு பெறாத நிலையில், மீண்டும் பணியமர்த்துவது சரியல்ல. உயர்கல்வித் துறை செயலரின் தலையீடு அதிகளவில் உள்ளது' என்றார்.தாராளம்?அரசு மற்றும் பல்கலை விதிகளின்படி, புதிய கல்லுாரி துவங்கும் போது, முதற்கட்டமாக, ஐந்து பாடப் பிரிவுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆனால், பாரதியார் பல்கலையின் கீழ், ஈரோட்டில் துவக்கப்பட்டுள்ள, அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான, கலை, அறிவியல் கல்லுாரிக்கு, 10 பாடப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான ஆலோசனை, பாரதியார் பல்கலையில் இன்று நடக்கவுள்ளது.
இது குறித்து, பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:அமைச்சர் என்பதால், அவரது கல்லுாரிக்கு சிறப்பு சலுகை வழங்குவதை ஏற்க முடியாது. இது முற்றிலும் விதிமீறல்; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சிக்கல் வரும். அனுமதிக்கலாம்அதேவேளையில், விதிமுறைகளில் திருத்தம் செய்து வழங்க ஆட்சேபனை இல்லை. அதாவது, இனி, புதிதாக துவங்கப்படும் அனைத்து கல்லுாரிகளிலும், 10 பாடங்களை துவக்க அனுமதிக்கலாம் என, திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
இப்புகார் குறித்து, பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர், திருநாவுக்கரசுவிடம் கேட்டபோது, ''எந்த விதமான முடிவுகளும், இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. சிண்டிகேட் கூட்டத்தில், இன்று ஆலோசனை நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U