திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 3 புதிய பாடப்பிரிவுகள் தொடங்க 8 கோடி நிதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 30, 2019

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 3 புதிய பாடப்பிரிவுகள் தொடங்க 8 கோடி நிதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக 3 பாடப்பிரிவுகள் தொடங்குவதற்காக 8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக 15வது பட்டமளிப்பு விழா காட்பாடி ஆக்சீலியம் மகளிர் கல்லூரி அரங்கில் நேற்று காலை நடந்தது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி 204 பேருக்கு பட்டங்களை வழங்கினார். உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:தமிழக அரசு உயர்கல்விக்காக 4,584.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2011ம் ஆண்டுக்கு பிறகு 82 புதிய கல்லூரிகளும், 1,666 புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் உயர்கல்வி சதவீதம் 25.8 ஆக உள்ளது. இதனை 2020க்குள் 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகளுக்கான விடுதி கட்ட தலா 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 7 முக்கிய பாடப்பிரிவுகளுடன் கூடுதலாக 3 புதிய பாடப்பிரிவுகள் தொடங்க ₹8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் குடியிருப்பு கட்ட 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews