👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு வழங்கிய பிறகே, தற்போதைய மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என மானாமதுரை எம்எல்ஏ கையெழுத்திட்டு கொடுத்த உறுதிக்கடிதம் வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. கொம்புக்காரனேந்தல், மானாமதுரை பள்ளிகளில் தற்போது 12 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. அப்போது 2017-18ம் கல்வி ஆண்டில் படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வந்து எங்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என்று மானாமதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ நாகராஜனிடம் கோரிக்கை வைத்தனர்.
கட்டிக்குளம் பகுதியில் முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு காரணமாக நேற்றுமுன்தினம் மாலை நடக்கவிருந்த விழா ரத்து செய்யப்பட்டது. கொம்புக்காரனேந்தல் அரசு பள்ளி விழா நடந்து கொண்டிருந்தபோது அங்கு கட்டிக்குளம் கிராமத்தில் இருந்து மாணவர்கள் சென்றனர். முன்னாள் மாணவர்களான எங்களுக்கு வழங்காமல் இந்தாண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேசிய எம்எல்ஏ, ‘இன்னும் 3 மாதத்திற்குள் லேப்டாப் வழங்கப்படும்’ என்றார். தொடர்ந்து, ‘முன்னாள் மாணவர்களுக்கு வழங்கி விட்டுத்தான் தற்போதைய மாணவர்களுக்கு வழங்கப்படும்’ என வெள்ளைத் தாளில் கையெழுத்திட்டு உறுதிக்கடிதம் கொடுத்து, பிரச்னையில் இருந்து தப்பினார். இந்த தகவல் தற்போது வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U