👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
யு.ஜி.சி., நிர்ணயித்த சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட அறிவிப்புகள் சட்டசபையில் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பில் அரசு கலைக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள 59 அரசு கலைக்கல்லுாரிகளில் 1,661 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம். சம்பள உயர்வுக்காக போராட்டங்களை முன் வைத்து வருகின்றனர்.தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர் சங்க மாநில தலைவர் தங்கராஜ் கூறியதாவது: 'தனியார் கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர்களுக்கு யு.ஜி.சி., நிர்ணயித்துள்ள தகுதி வேண்டும்' என பல்கலைகள் உத்தரவிட்டுள்ளன. அரசு கல்லுாரி விரிவுரையாளர்கள் குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. பல்கலை கடிதம் தனியார் கல்லுாரிக்கு மட்டுமா, அரசு கல்லுாரிகளுக்கும் பொருந்துமா என்பதை உயர்கல்வி துறை தெளிவுபடுத்த வேண்டும்.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு 2010ல் 25 ஆயிரம் ரூபாய், 2019 ஜனவரி முதல் 50 ஆயிரம் சம்பளம் ரூபாய் சம்பளம் வழங்க யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. 2010 உத்தரவை கூட தமிழக அரசு அமல்படுத்தவில்லை. கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய பரிந்துரைப்பதாக கடந்த சட்டசபை கூட்டத் தொடரின்போது அமைச்சர் கூறினார். அதுவும் கிடப்பில் உள்ளது.தற்போதைய கூட்டத்தொடரில் சம்பள உயர்வு, பணி நிரந்தர அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். மற்ற மாநில அரசுகள் யு.ஜி.சி., நிர்ணயித்த சம்பளத்தை அமல்படுத்தி உள்ளன, என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U