👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவப் படிப்பிற்கு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங் மற்றும் அதனடிப்படையில் 2019-20ல் முதலாம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்களை அரசு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை ஒத்தக்கடை தீட்சிதா தாக்கல் செய்த மனு: நீட் தேர்வில் பங்கேற்றேன். மருத்துவப் படிப்பிற்கு எனக்கு மாநில ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை. மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 15 சதவீத இடங்களில், மாநில ஒதுக்கீட்டிற்கு சில இடங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழகத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே கவுன்சிலிங்கில் இடம் ஒதுக்க வேண்டும்.
மாநில ஒதுக்கீட்டில் பரிசீலிக்கக்கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்தால் என்னைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு தீட்சிதா மனு செய்தார்.நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவு: ஆன்லைன் மூலம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இரண்டு கட்ட கவுன்சிலிங் நடந்துள்ளது.இதில் 115 இடங்கள் பூர்த்தியாகாததால், அவை மாநில ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு சந்தேகம் எழுகிறது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் மற்றும் அதனடிப்படையில் 2019-20ல் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியானவர்களின் விபரங்களை அரசுத் தரப்பில் ஆக.,2 ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U