காரைக்காலில் பிரெஞ்சு பள்ளி மூடல் பிரான்ஸ் எம்.பி.,யிடம் முறையீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 26, 2019

காரைக்காலில் பிரெஞ்சு பள்ளி மூடல் பிரான்ஸ் எம்.பி.,யிடம் முறையீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காரைக்காலில் இயங்கிவந்த பிரெஞ்சு பள்ளி திடீரென மூடப்பட்டது குறித்து, பிரான்ஸ் நாட்டின் எம்.பி.,யிடம், பெற்றோர்கள் முறையிட்டனர்.காரைக்கால் தெய்தா வீதியில் பிரெஞ்சு அரசு சார்பில், தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பிரெஞ்சு பள்ளியில், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் பிள்ளைகள் உட்பட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன், இப்பள்ளி திடீரென மூடப்பட்டது. இதுகுறித்து பெற்றோர்கள், புதுச்சேரி பிரெஞ்சு அலுவலகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எம்.பி., ஷான் ஈவ் லெக்கோந்த, காரைக்கால் வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பிரெஞ்ச் நினைவு சின்னத்திற்கு மாரியாதை செலுத்தினர். பின், பிரெஞ்சு அலுவலகத்திற்கு சென்ற பிரான்ஸ் எம்.பி.,யை, பிரெஞ்சு குடியுரிமை உள்ள பெற்றோர்கள் சந்தித்து, மூடப்பட்ட பிரெஞ்சு பள்ளியின் நிலை குறித்து விளக்கினர். இதுகுறித்து பிரெஞ்சு அலுவலகத்தில் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, எம்.பி., கூறினார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews