ஆசிரியை கொலையை நேரில் பார்த்த மாணவர்களுக்கு மனநல ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 24, 2019

ஆசிரியை கொலையை நேரில் பார்த்த மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருமங்கலம் தனியார் பள்ளியில், ஆசிரியை கொலையை நேரில் பார்த்த மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் தனியார் பள்ளி வகுப்பறையில், நேற்று முன்தினம், ஆசிரியை ரதிதேவி, 35, அவரது கணவர் குருமுனீஸ்வரன், 37, என்பவரால், குத்தி கொலை செய்யப்பட்டார்.குடும்ப பிரச்னையில், இந்த கொலையை செய்ததாக, குருவை, போலீசார் கைது செய்தனர்.இதை நேரில் பார்த்து மிரட்சியடைந்த, 40க்கும் மேற்பட்ட மாணவர்களும், மற்ற வகுப்பு மாணவர்களும் மனதளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களின் நலன் கருதி, நேற்று, பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.மாணவர்களின் பீதியை போக்க, பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு, இரண்டு நாட்களில், அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
இந்த குழுவில், மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள், போலீசார், ஆசிரியர்கள் இடம் பெற உள்ளனர்.இதற்கிடையில், ரதிதேவியின் தாயார் சாந்தி, போலீசில் அளித்த புகாரில், குருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், 'ரதிதேவியை இங்கு அழைத்து வா; இல்லை என்றால் கொலை செய்துவிடு' என துாண்டி விட்டு கூட்டுச் சதி செய்ததாக, தெரிவித்துள்ளார்.இதன்படி, குருவின் தாய், தந்தை, சகோதரிகள் இருவர், அவர்களது கணவர்கள் மீது கூட்டுச்சதி, அத்துமீறி நுழைதல், கொலை மற்றும் உடந்தையாக இருத்தல் ஆகிய பிரிவுகளில், திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews