👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், தொழில்நுட்பம் சாராத பணியாளர்களுக்கான தேர்வு, ஏழு நகரங்களில், ஆக., 2ல் துவங்குகிறது.இது குறித்து, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின், துணை செயலர், ராஜலட்சுமி அறிவிப்பு:சென்னையில் உள்ள, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின், தெற்கு பிராந்தியம், தொழில்நுட்பம் சாராத பணிக்கான தேர்வை, ஆக., 2, 5, 6, 7, 8, 9 மற்றும் 13ம் தேதிகளில் நடத்துகிறது.இந்த தேர்வுகள், தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள, 20 நகரங்களில், 40 தேர்வு மையங்களில், தேர்வுகள் அனைத்தும், கணினி முறையில் நடத்தப்படுகிறது; 2 லட்சத்து, 44 ஆயிரத்து, 824 பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலுார் ஆகிய நகரங்களில், தேர்வு நடைபெறுகிறது. வேலுாரில் லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதால், ஆக., 5ல், தேர்வு நடத்தப்பட மாட்டாது.ஒரு நாளில், மூன்று வேளைகளில் தேர்வு நடக்கிறது. முதல் வேளை, காலை, 9:00 - 10:30 மணி; இரண்டாவது வேளை, பகல், 12:30 - 2:00 மணி; மூன்றாவது வேளை, மாலை, 4:00 - 5:30 மணி வரை தேர்வுகள் நடைபெறும்.தேர்வுக்கு ஏழு நாட்களுக்கு முன், தேர்வு மைய அனுமதி சீட்டை, தேர்வாணைய இணையதள பக்கத்திலிருந்து, பதிவிறக்கம் செய்யலாம். கைக்கடிகாரம், புத்தகம், துண்டு சீட்டுகள், பத்திரிகைகள், மொபைல் போன், &'ப்ளூ டூத்&' போன்ற மின்னணு சாதனங்கள், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.மேலும் விபரங்களை, 044 - -2825 1139, 94451 95946 என்ற, எண்களில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U