பட்ட மேற்படிப்பு மையத்தில் புதிய முதுகலை படிப்பு... நடப்பு கல்வியாண்டில் 125 இடங்களும் அதிகரிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 26, 2019

பட்ட மேற்படிப்பு மையத்தில் புதிய முதுகலை படிப்பு... நடப்பு கல்வியாண்டில் 125 இடங்களும் அதிகரிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில், 30 ஆண்டுகளுக்கு பின், புதிய முதுகலை பட்டப் படிப்பு துவக்கப்பட உள்ளது.லாஸ்பேட்டையில் உள்ள, தாகூர் கலைக் கல்லுாரி வளாகத்தில் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் அமைந்துள்ளது. கடந்த 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மையத்தில், எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., உள்ளிட்ட 12 முதுகலை பட்டப் படிப்புகள் உள்ளன. மேலும், 8 பிரிவுகளில் பி.எச்டி., 11 பிரிவுகளில் எம்.பில்., ஆய்வு பட்டங்களும் வழங்கப்படுகிறது.
வேகம் எடுக்கும் வளர்ச்சி பணிமையத்தின் இயக்குனராக அறவாழி இருசப்பன் பொறுப்பேற்றதில் இருந்து, மையத்தின் செயல்பாடுகள் புதிய திசையை நோக்கி வேகம் பிடித்துள்ளது. தனியார் கல்லுாரிகளுடன் போட்டி போடும் வகையில், பல்வேறு வசதிகள் பட்ட மேற்படிப்பு மைய வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன. தன்னாட்சி நிறுவன அந்தஸ்துடன் திகழும் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கல்லுாரிகளை உள்ளடக்கிய தர வரிசைப் பட்டியலில் 49வது இடத்தை பிடித்து முத்திரை பதித்துள்ளது. மேலும், அடுத்த சிகரத்தை எட்டி பிடிக்கும் பல்வேறு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது .உள்ளூர் மாணவர்களுக்கு வாய்ப்புபட்ட மேற்படிப்பு மையம் துவக்கப்பட்டு 29 ஆண்டுகளை கடந்து, 30ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 30 ஆண்டுகளில் புதிய படிப்புகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறையாக இருந்தது. தற்போது, மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு, நடப்பு கல்வியாண்டில் இருந்து எம்.எஸ்சி., (புள்ளியியல்) படிப்பை ஆரம்பிப்பதற்கு அரசு திட் டமிட்டுள்ளது.கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.எஸ்சி., (புள்ளியியல்) படிப்பு உள்ளது.
இங்கு படிக்கும் மாணவர்கள், எம்.எஸ்.சி., (புள்ளியியல்) படிக்க வேண்டும் என்றால், புதுச்சேரி பல்கலைக் கழகத்தை நாட வேண்டி உள்ளது. புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் சேர வேண்டும் என்றால், அகில இந்திய அளவில் போட்டியிட வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள எம்.எஸ்சி., (புள்ளியியல்) முதுகலை படிப்பு, புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.125 இடங்கள் அதிகரிப்புமேலும், பட்டமேற்படிப்பு மையத்தில் முதுகலை பட்டப் படிப்புக்களுக்கான இடங்களின் எண்ணிக்கையும் நடப்பு கல்வியாண்டில் கூடுதலாக்கப் பட்டுள்ளது. அதாவது, எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளில் 425 இடங்கள் உள்ளன. தற்போது, 125 இடங்கள் அதிகரிக்கப்பட் டுள்ளன. இதன் மூலம், எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை 550 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது. - நமது நிருபர் -
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews