👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இந்த கல்வியாண்டு முதல் ஒட்டு மொத்தமாக 4,500 வரையில் அதிகரிகக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 350 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 20ம் தேதி வரையில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இந்தாண்டு 4,500 எம்பிபிஎஸ் சீட் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய மருத்துவ கவுன்சில் மத்திய குடும்ப மற்றும் சுகாதாரத்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 33 மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்து. இதில் பெரும்பாலும் நேரடி மருத்துவமனை-மருத்துவக்கல்லூரிகள் ஆகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், மொத்தம் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் 3 ஆயிரம் எம்பிபிஎஸ் சீட் உள்ளது. கரூரில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரியில் 150 இடங்கள் உள்ளது. இதே போல் திருநெல்வேலி, மதுரை மருத்துவக்கல்லூரிகளில் தலா 100 இடங்கள் கூடுதலாக்கி, மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, இந்தாண்டு மொத்தம் தமிழகத்தில் 350 எம்பிபிஎஸ் சீட் கூடுதலாக கிடைத்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U