👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
8 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக ஆண்டு வருமானம் பெறும் 'நலிவடைந்த பிரிவினருக்கு' 10% இட ஒதுக்கீடு வழங்க கடந்த ஜனவரி மாதம் மத்திய அமைச்சரவை ஒப்பதல் கொடுத்தது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு கோவா மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய இட ஒதுக்கீடு வழங்கும் முடிவெடுத்திருப்பதைத் தெரிவித்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மாநிலத்தில் ஏற்கெனவே இட ஒதுக்கீடு மூலம் பலன் பெற்றுவரும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கும் தொடர்ந்து அந்த பலன்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் எனக் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமூகத்தில் நலிவடைந்த மக்களின் நலனுக்காக இட ஓதுக்கீடு வழங்கும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம்." எனக் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீட்டைப் பாதிக்காத வகையில் இந்த இட ஒதுக்கீட்டு ஒப்புக்கொள்ளப்பட்டது எனவும் கூறினார்.
இதுவரை எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதன்படி 8 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக ஆண்டு வருமானம் பெறும் 'நலிவடைந்த பிரிவினருக்கு' 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவையும் ஜனவரி மாதமே ஒப்புதல் கொடுத்தது.
அரசு வேலை வாய்ப்புகளில் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்கவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. எஸ்.எஸ்.சி. (SSC), யு.பி.எஸ்.சி. (UPSC), ஆர்.ஆர்.பி. (RRB) மற்றும் எஃப்.சி.ஐ. (FCI) ஆகிய மத்திய அரசின் அமைப்புகள் வெளியிட்ட வேலை வாயப்பு அறிவிப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு, கட்-ஆப் மதிப்பெண், தேர்வு எழுதும் வாய்ப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றில் சலுகை அளிக்கப்படவில்லை என விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் பொதுப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி தமிழக அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த மாதம் கூறினார். அந்த இட ஒதுக்கீடை வழங்கினாலும் ஏற்கெனவே இருக்கும் 69% இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு இருக்காது எனவும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவறுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் பல தரப்புகளில் இருந்தும் மிகக் கடுமையான எதிர்ப்பு நிலவும் சூழலில் மருத்துவப் படிப்பில் புதிய இட ஒதுக்கீடு பற்றிய முடிவை தமிழக அரசு இன்னும எடுக்காமல் இருக்ககிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U