👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர, விண்ணப்பங்கள் அளிப்பதற்கான தேதி, வரும், 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியார் தொழில் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், மாணவர்கள் சேர, மே, 31 வரை,
www.skilltraining.tn.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் அடிப்படையில் நடக்கும், மாவட்ட கலந்தாய்வுக்கான, தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடக்கும் நாள், தேதி, இடம் உள்ளிட்ட விபரங்கள், அதே இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள, மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்தி அனுப்பப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும், எந்த தொழில் பயிற்சி நிலையத்தில், மாவட்ட கலந்தாய்வு நடக்கும் என்ற விபரம், இணையதளத்தில் தரப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்; 044 - 22501006 என்ற தொலைபேசி வாயிலாகவும் அறியலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U