ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்; கடலூரில் 2,184 இளைஞர்கள் பங்கேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 08, 2019

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்; கடலூரில் 2,184 இளைஞர்கள் பங்கேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கடலுாரில் நடந்த, ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமில், வேலுார், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 2,184 இளைஞர்கள் பங்கேற்றனர். கடலுார், அண்ணா விளையாட்டரங்கில், ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணிக்கு, முகாம் துவங்கியது. முகாமில் பங்கேற்க, அழைப்பு கடிதம் பெற்ற, வேலுார், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 2,240 இளைஞர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். இதில், உயரம் அளவீடு மற்றும் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டு, 336 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, இரண்டாம் கட்டமாக, உடல் தகுதித் தேர்வு, மார்பளவு, எடை பரிசோதனை செய்யப்பட்டு, கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியும் நடந்தது. முகாம், நேற்று காலை, 6:30 மணிக்கு முடிந்தது. இன்று நடக்கும் முகாமில், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பங்கேற்கின்றனர். ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம், 17ம் தேதி வரை நடக்கிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews