👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தரமில்லாத, 92 இன்ஜினியரிங் கல்லுாரிகளின் பட்டியலை வெளியிடாததால், அண்ணா பல்கலையின் துணை வேந்தர் மற்றும், பதிவாளர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஜூலையில் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு முடிந்துள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலையின் ஆய்வில், 92 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கல்லுாரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய தனியார் கல்லுாரி பணியாளர்கள் அமைப்பின் நிறுவனர், கே.எம்.கார்த்திக், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குனருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலை ஆய்வு குழுவினர் நடத்திய, நேரடி கள ஆய்வில், 92 இன்ஜி., கல்லுாரிகளில், உள்கட்டமைப்பு குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால், இந்த கல்லுாரிகளில் புதிதாக மாணவர்களை சேர்க்க, அண்ணா பல்கலை அனுமதி அளித்துள்ளது.
தரமில்லாத இந்த கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்ந்தால், அவர்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படும். எனவே, 92 கல்லுாரிகளின் பட்டியலை, பொது தளத்தில் வெளியிட வேண்டும் என, பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர், கல்லுாரிகளின் பட்டியலை வெளியிடாமல் காலம் தாழ்த்துகின்றனர்.
இதில், தரமில்லாத கல்லுாரிகளுக்கு ஆதரவாக, பல்கலை துணை வேந்தர் உள்ளிட்டவர்கள் செயல்படுகின்றனரோ என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, துணை வேந்தர், பதிவாளர் மற்றும் இணைப்பு பிரிவு இயக்குனர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும்.
தரமில்லாத கல்லுாரிகளின் பெயர் பட்டியலை பெற்று, போலீசாரே, அதை பொது மக்களுக்கு வெளியிட வேண்டும். அந்த கல்லுாரிகளை, மக்கள் தெரிந்து கொண்டால் மட்டுமே, அவற்றில் சேராமல் தவிர்க்க முடியும். இவ்வாறு, புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அண்ணா பல்கலை பதிவாளர் குமார் கூறியதாவது: அண்ணா பல்கலையில், எந்த தவறும் நடக்கவில்லை. முறைப்படி கல்லுாரிகளில் ஆய்வு செய்து, குறைகளை கண்டறிந்துள்ளோம். அவற்றின் பட்டியலை வெளியிடலாமா என, ஆலோசனை நடத்துகிறோம். அவ்வாறு வெளியிட்டால், தற்போது அங்கு, இரண்டு, மூன்று, நான்காம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.அதேபோல, அக்கல்லுாரிகளின் நிர்வாக பிரச்னைகளையும் கவனத்தில் கொண்டே, இவ்விவகாரத்தில், நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U