மாவட்ட நீதிமன்ற பணிக்கு நேர்காணல் ஒத்திவைப்பு : தேர்வர்கள் அவதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

மாவட்ட நீதிமன்ற பணிக்கு நேர்காணல் ஒத்திவைப்பு : தேர்வர்கள் அவதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவை கோர்ட்டில் காலி பணியிடங்களுக்கு நேற்று நடைபெற இருந்த நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் அவதியடைந்தனர். கோவை தலைமை கோர்ட்டில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், மசால்ஜி, இரவு காவலர் ஆகிய பணியிடங்களுக்கான நேர்காணல் நேற்றும், இன்றும் நடைபெற உள்ளதாக மாவட்ட நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடைசி நாளான நேற்று மாவட்ட நீதிமன்ற வலைதளமான district.ecourts.gov.in / coimbatore ல் வெளியானது. இறுதி நேரத்தில் இந்த ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியான நிலையில், நேற்று நேர்காணல் நடப்பதாக நினைத்து ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என தேர்வர்கள் கோவை மாவட்ட நீதிமன்றத்திற்க்கு வந்தனர். ஆனால் அங்கு ஒட்டப்பட்டிருந்த ஒத்திவைப்பு போஸ்டரை படித்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது குறித்து நேர்காணலுக்கு வந்தவர்கள் கூறுகையில், ‘‘கோவை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், மசால்ஜி, இரவு காவலர் ஆகிய பணிக்கு கடந்த 2017ல் ஆண்டு தெர்வெழுதினோம். தற்போது நேர்காணல் நடைபெறுவதாக ஏற்கனவே மாவட்ட நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடைசி நேரத்தில் நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்த முறையான அறிவிப்பு கிடைக்காததால் பல மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வந்தோம். தற்போது ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம். ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற இருந்த எழுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நேர்காணலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews