👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய கல்வி கொள்கை குறித்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.
நாடு முழுவதும், கல்வி முறையை மாற்றவும், தரம் உயர்த்தவும், புதிய கல்வி கொள்கையை, மத்திய அரசு தயாரித்துள்ளது. ஏற்கனவே, காங்., ஆட்சி காலத்தில், ஒரு கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டு, பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கருத்து கேட்கப்பட்டது. இதில், பல்வேறு சர்ச்சையான திட்டங்கள் இருந்ததால், ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது.இதையடுத்து, அந்த கல்வி கொள்கையை, மத்திய அரசு கைவிட்டு விட்டு, புதிய கல்வி கொள்கையை தயாரித்துள்ளது.
இதற்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதிலுள்ள அம்சங்களை செயல்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து, வரும், 30ம் தேதிக்குள்,
nep.edu@nic.in என்ற, இ - மெயில் முகவரியில், கருத்து தெரிவிக்கலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஆசிரியர் சங்கங்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் தரப்பில், தனித்தனியாக கருத்துகள் அனுப்பப்படுகின்றன. மாநில அரசின் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளன.தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க, கருத்து கேட்பு கூட்டம் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துஉள்ளது. மாவட்ட வாரியாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை அழைத்து, கருத்துகளை கேட்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U